தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Friday, 27 March 2015

மாநிலம் முழுதும் தீயென பரவட்டும்

ஒப்பந்த ஊழியர் போராட்டம் 

நேற்று 27/03/2015 காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
பிப்ரவரி மாத சம்பளத்தை வழங்கக்கோரியும் 
வரும் மாதங்களில் குறித்த தேதியில் சம்பளத்தை பட்டுவாடா செய்யக்கோரியும் காலையில் போராட்டம் துவங்கியது. 

பகல் 12 மணிக்குள் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என நிர்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டு அவ்வாறே பட்டுவாடா செய்யப்பட்டது.

நமது தோழர்கள் பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளதால் ஒரு சில வங்கிகளில் சம்பளம் இன்னும் வரவு வைக்கப்படவில்லை. 
இன்று அனைத்து தோழர்களுக்கும் பட்டுவாடா செய்து முடிக்கப்படும்.

மார்ச் மாதச்சம்பளம் 07/04/2015க்குள் வழங்கப்படாவிட்டால்
 08/04/2015  அன்று போராட்டம் நடைபெறும். 
ஒவ்வொரு  மாதமும் பிரதி  7ந்தேதி சம்பளம் வழங்கவில்லை என்றால் 
ஒவ்வொரு  மாதமும் பிரதி  8ந்தேதி போராட்டம் நடைபெறும். 

ஒப்பந்த ஊழியர்களுக்காக  
ஒவ்வொரு மாதமும் 
நிச்சயிக்கப்பட்ட போராட்டம்  
நிச்சயம் நடைபெறும் 


No comments:

Post a Comment