தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Monday 25 June 2018

TMTCLU
மாவட்ட செயற்குழு
24-06-2018 அன்று காலை நமது NFTE  தொழிற்சங்க அலுவலகத்தில் தோழர் M.S.குமார் மாவட்ட தலைவர் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.   செயற்குழுவிற்கு வருகை   புரிந்த அனைவரையும் சிதம்பரம் தோழர் E.டெல்லி பாபு, வரவேற்றார்.  தோழர்  A.S.குரு பிரசாத் மாவட்ட செயலர் ஆய்படு பொருளை அறிமுகபடுத்தி உரையாற்றினார். செயற்குழுவில் துவக்கவுரையாக தோழர்                           V. லோகநாதன் மாநில துணைத் தலைவர்  நாம் எப்படி ,எவ்வாறு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்,  எதிர்கால தேவைகள் பற்றியும், FIXED TERM EMPLOYMENT பற்றியும்  , அதனை எவ்வாறு எதிர்கொள்வதை பற்றியும்  தமது உரையில் பதிவு செய்தார்.
செயற்குழுவுக்கு வந்திருந்த மாவட்ட சங்க, கிளைச் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் S. நடராஜன், R.அகஸ்டீன் , R.மணி விழுப்புரம், தோழர்கள் P.ராஜா, உதயசூரியன்  கள்ளக்குறிச்சி, தோழர் A.பாஸ்கர் ULD,  தோழர் A.சக்திவேல் விருதை, தோழர் விஜயகாந்த் திண்டிவனம், தோழர் தோழர்கள் கிருஷ்ணகுமார், தமிழரசன், ஐயப்பன் சிதம்பரம், தோழர் P.விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டு   தங்களது கருத்துக்களை சுருக்கமாக பதிவு செய்தனர்.  தோழர் G.ரங்கராஜ் மாவட்ட உதவிச் செயலர்   செயற்குழுவின் நோக்கத்தையும், நமது எதிர்கால தேவைகளையும் அறிந்து நாம் எப்படி செயல்பட வேண்டும் என்றும் பதிவு செய்தார்.வாழ்த்துரையில்  தோழர் E. விநாயகமூர்த்தி கிளைச் செயலர், தொலைபேசி கிளை, SEWA-BSNL  மாவட்ட செயலர் தோழர் M. தினகரன் செயற்குழுவின் நோக்கம்  வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாநில இணை பொதுச் செயலர் தோழர் சு.தமிழ்மணி    நமது சங்கம் கடந்து வந்த பாதையும் , நமது செயல்பாடுகளையும் பற்றியும் தெளிவாக விளக்கினார். தோழர் R.செல்வம் மாநில பொதுச் செயலர்    தமது உரையில்  மாநில சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக  செயல்பட்டு வருவதனையும், நீதிமன்ற வழக்கு , தொழிலாளர் நல அலுவலகத்தில் நாம் தொடந்த வழக்குகள் பற்றியும்  தெளிவாக தமது சிறப்புரையில் பதிவு செய்தார்.
 நிறைவாக  தோழர் K.சுந்தர் /CDM செயர்குழுவிற்கு வந்திருந்த அனைவருக்கு நன்றி கூறினார்.


தீர்மானங்கள்

1.      புதிய டெண்டரை காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்யக் கூடாது
2.      மாத ஊதியத்தில் திடீர் பணப் பிடித்தம் செய்வதை இந்த மாவட்ட செயற்குழு  ஒப்பந்தகாரரை வண்மையாக கண்டிக்கிறது.
3.      2009 ஆண்டு ஊதிய உயர்வின் நிலுவை தொகையை உடணடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட  இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
4.      கிளைச் சங்கங்கள் உறுப்பினர் சந்தாவை உடனடியாக வசூல் செய்து மேல்மட்டத்திற்கு அனுப்ப வேண்டும்.
5.      பெரும்பாலான  தொலைபேசி நிலையத்தில் செக்யூரிட்டி தோழர்களை பணியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் அங்கு பணி வழங்கிட இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
6.      ஒப்பந்த ஷரத்தில் உள்ளபடி சம்பள விபரங்கள் அடங்கிய பட்டியலை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட ஒப்பந்தகாரிடம் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று  இச்செயற்குழு கேட்ட்க் கொள்கிறது.
7.      SSA-MERGERல்  ELECTRICAL, CIVIL  பகுதியில் பணிபுரியும்  நிரந்திர ஊழியர்களை இணைத்தது போல  A/C  Plantல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களையும் HOUSE KEEPING  டெண்டரில் இணைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
8.      இந்த ஆண்டு போனஸ் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட மாவட்ட  நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
9.       நமது ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் தத்தமது வேலைகளை மிகுந்த பொறுப்புணர்வோடும், பணிவோடும், நேர்த்தியான முறையில் செய்யவும், நமது BSNL  நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிட பாடுபட வேண்டும் என நமது தோழர்களை  இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
A.S.குருபிரசாத்

  மாவட்டச் செயலர் -TMTCLU 


Friday 1 June 2018

தோழியர் J.ஜோதி (தற்காலிக ஊழியர்)
பணி ஓய்வு பாராட்டு விழா - கடலூர்
           நமது பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து இம்மாத  பணி ஓய்வு பெறும் தோழியர் J.ஜோதி அவர்கள் பணி ஓய்வு பெறவுள்ளார். அவரது 30ஆண்டு கால இலாகா சேவையினை பாராட்டும் விதமாக நமது TMTCLU கடலூர் கிளைச் சங்கத்தின் சார்பில் கிளைத் தலைவர் தோழர் P.சுந்தர்ராஜ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் கிளைச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார். NFTE மாவட்டத் தலைவர் தோழர் G.கனேசன் , TMTCLU பொதுச் செயலர் தோழர் R.செல்வம், TMTCLU மாவட்ட செயலர் தோழர் A.S.குருபிரசாத், மாவட்ட தலைவர் தோழர்  M.S.குமார், NFTE  மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன்,  வெளிபுறப்பகுதி கிளைச் செயலர் தோழர் E.வி நாயகமூர்த்தி, பொது மேலாளர் அலுவலக கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன், மூத்த தோழர் சு.தமிழ்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
          இறுதியாக நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தமது உரையில் தோழியரின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களையும் தோழியரின் பணி நிரந்திர சம்மந்தமாக  வழக்கு  நீதிமன்றத்தில்  இருப்பதனால் மிக விரைவில்  முடித்து தருவதற்கு நமது சங்கம் உறுதுணையாக இருக்கும். அதே போல் தோழியருக்கு கிடைக்க வேண்டிய EPF பணம் கிடைக்கவும்  நாம் ஏற்பாடு செய்து தருவோம்  என நம்பிக்கை தந்து  தமது சிறப்புரையினை நிறைவு செய்தார்.
          இறுதியாக தோழர் M.மணிகண்டன் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி நவில கூட்டம் நிறைவுற்றது. கூட்ட்த்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திட்ட திண்டிவனம் தோழரும் NFTE மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் S.குமார் அவர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
          பணி ஓய்வு பெறும் தோழியருக்கு தாரளமாக நிதியுதவி அளித்திட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு NFTE-TMTCLU  மாவட்ட சங்கங்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி
                                                                                                                                                                                                                                                             தோழமையுடன்
                                                                                      NFTE-TMTCLU ,

                                                                           மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.


கன்டன ஆர்ப்பாட்டம் - கடலூர்
            தூத்துக்குடியில் தன் மக்களின் நலனுக்காக 100 நாட்கள் அறவழியில் போராடிய அப்பாவி பொது மக்களின் மீது  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து கடலூர் BSNLலிலுள்ள அனைத்து சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 25-05-2018 அன்று மதிய உணவு இடைவேளையின் போது நடந்தத்து.
          அதில் நமது அனைத்து சங்கத் தோழர்கள் இறந்த போனவர்களுக்கு அஞ்சலியையும், துப்பாக்கி சூடு நடத்தியதனை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்ததது. கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக பங்கேற்று தங்களது ஜனநாயக கடமையாற்றினார்கள்

          கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பல...