NFTE - TMTCLU
கடலூர் மாவட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்து NFTE - TMTCLU சார்பில் 17.11.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதன் விளைவாக மாவட்ட நிர்வாகம் ஒப்பந்தக்காரை உடணடியாக ஊதியம் வழங்க உத்திரவிட்டது . ஒப்பந்தக்காரர் (20-11-2018 ) இன்று நமது மாவட்டத்தில் அணைத்து தோழர்களுக்கும் முதல் தவணையாக ரூபாய் 5000 /- வழங்கியுள்ளார்.
இருப்பினும் நமது மாவட்ட சங்கம் முழுமையான ஊதியம் வழங்க வேண்டமென்றும், 2009க்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும் எனவும், விடுப்பட்ட தோழர்களை பணியமர்த்த வேண்டியும் வரும் 22-11-2018 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டமும், 28-11-2018 அன்று கடலூர் பொது மேலாளர் அலுவலக முன்பாக மாபெரும் தர்ணா நடைபெறும்.
ஆகவே நமது உரிமையை நிலைநாட்டிட!....
ஒன்றுபட்டு போராடிடுவோம்!...
வெற்றி பெறுவோம்!...
தோழமையுடன்
NFTE-TMTCLU
மாவட்டச் சங்கங்கங்கள்
கடலூர்
No comments:
Post a Comment