தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday 20 November 2018

NFTE - TMTCLU
கடலூர் மாவட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்து NFTE TMTCLU  சார்பில் 17.11.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதன் விளைவாக மாவட்ட நிர்வாகம்  ஒப்பந்தக்காரை உடணடியாக ஊதியம் வழங்க உத்திரவிட்டது . ஒப்பந்தக்காரர்  (20-11-2018 ) இன்று நமது மாவட்டத்தில் அணைத்து தோழர்களுக்கும் முதல் தவணையாக ரூபாய் 5000 /- வழங்கியுள்ளார்.

இருப்பினும் நமது மாவட்ட சங்கம் முழுமையான ஊதியம் வழங்க வேண்டமென்றும், 2009க்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும் எனவும், விடுப்பட்ட தோழர்களை பணியமர்த்த வேண்டியும் வரும்   22-11-2018 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டமும், 28-11-2018 அன்று கடலூர் பொது மேலாளர் அலுவலக முன்பாக மாபெரும் தர்ணா நடைபெறும்.

ஆகவே நமது உரிமையை நிலைநாட்டிட!....
ஒன்றுபட்டு போராடிடுவோம்!...
வெற்றி பெறுவோம்!...
         
தோழமையுடன்
NFTE-TMTCLU

                                                          மாவட்டச் சங்கங்கங்கள்
                                                                        கடலூர்  

No comments:

Post a Comment