தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Thursday 15 November 2018

சம வேலைக்கு சம ஊதியமும்
                    உச்ச நீதிமன்ற தீர்ப்பும்

அன்புள்ள தோழர்களே வணக்கம்!..
   சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இரண்டு தொழிற்ச்சங்க தலைவர்கள் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர் தொழிலாளிக்கு எதிராக தீர்ப்பு வந்தது இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்  உச்ச நீதி மன்றம் பல்வேறு தீர்ப்புகளை ஆராய்ந்து 26/10/2016 அன்று அரசுத்துறை பொதுத்துறை தனியார் துறை ஆகிய துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலார்கள் அனைவரும் மனிதர்களே அவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது ஆகவே ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

 அதன் அடிப்படையில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் அந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 14/11/2018 அன்று ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது கேஷ்வல் மஸ்தூர் ஒப்பந்த ஊழியர்கள் தினக்கூலி ஆகியோருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதோடு நிர்வாகத்தில் காலி இடம் இருந்தால் அவர்களை கொண்டு நிரப்ப வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனை பெறுவதற்க்கு TMTCLU  மாநிலச்சங்கம் ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது இதற்க்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது தேவை எல்லாம் ஒற்றுமைதான் ஒன்றுபடுவோம்..... நிரந்தர ஊழியர்களோடு......  சேர்ந்து போராடுவோம்...
                  நாளை நமதே.......
தோழமையுடன்
 ஆர் செல்வம்
                                                                                                           பொதுச் செயலர்

                                                                                                                 TMTCLU

No comments:

Post a Comment