தேனியில் டிசம்பர் 27,28 தேதிகளில் AITUC மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள்.குருதாஸ் தாஸ்குப்தா, தா.பாண்டியன், இரா.நல்லக்கண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
AITUC சார்பாக தர்மபுரி தோழர்.மணி, NFTE சார்பாக தோழர்கள் SS.கோபாலகிருஷ்ணன்,காமராஜ், TMTCLU சார்பாக தோழர் .செல்வம் ஆகியோர் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். நமது இயக்க வழிகாட்டி தோழர்.சேது தலைமையில் மதுரை தோழர்கள். இலட்சம்,முருகேசன் ,காரைக்குடி தோழர்கள்.சேக்காதர் பாட்சா,லால் பகதூர்,தமிழ்மாறன்,
மாரி ஆகியோர் வரவேற்புக்குழுவில் பணியாற்றினர்.
தோழர்.TM.மூர்த்தி தமிழ் மாநில AITUC
பொதுச்செயலராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.
-தோழர் மாரி -காரைக்குடி
No comments:
Post a Comment