சிறப்பான NFTE- TMTCLU மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துவக்கயுரை TMTCLU மாவட்ட செயலர் ராஜேஷ்.அவர்களும் தொடர்ந்து குடந்தை மயிலை சீர்காழி ஆடுதுறை திருப்பனந்தாள் குத்தாலம் காரை நாகை என அனைத்து கிளைசங்க பொருப்பாளர்களும் தங்களது மேலான சங்க வளர்ச்சிக்கும் இன்றைய நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் விளக்கமாக விவாதிக்கப்பட்டது மாவட்ட அழைப்பின் பேரில் வருகைதந்து சிறப்பாக கடலூர் மாவட்ட செயலபாடுகளை விளக்கி உற்சாக மூட்டிய தோழர்.
M.Sகுமார் மற்றும் NFTE மாநில அமைப்பு செயலரின் அரவனைப்பான பேச்சோடு குடந்தை மாவட்ட செயல்பாடு மற்றும் போராட்டவழிமுறைளை வகுத்து சிறப்பு செய்த அடிதட்டு தோழர்களின் துயர்துடைக்கும் தோழர்
விஜய் அவர்கள் ஆற்றிய உரையாலும் இறுதியில் TMTCLU மாநில செயலாளர் தோழர்
செல்வம் அவர்களின் நம்பிக்கையூட்டும் விவாதங்களோடும் தோழர் நந்தகுமார் அவர்களின் நன்றி நவிதலோடு சிறப்பாக மாவட்டசெயற்குழு நிறைவு பெற்றது வருகைதந்து சிறப்பித்த மாநில மாவட்ட கிளைச்சங்க நிர்வாகிகளுக்கும் இச்செயற்குழுவை சிறப்பிக்க வருகைதந்து வாழ்த்திய தோழர்கள் குத்தாலம் நாகராஜ் குப்புசாமி மயிலை தோழர்கள் குமார் பாலு மற்றும்அனைத்து NFTE TMTCLU தோழர்களுக்கும் மனதார நன்றி பாராட்டி மகிழ்கிறது.
குடந்தை TMTCLU மாவட்ட சங்கம்.
No comments:
Post a Comment