தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com
Monday, 12 November 2018
Friday, 2 November 2018
NFTE-TMTCLU
மாவட்டச் செயற்குழு
( 28-10-2018 )
28-10-2018 அன்று மாவட்டத் தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில்
மாவட்ட செயற்குழு நமது NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தோழர் R.பன்னிர்செல்வம் வரவேற்புரையாற்றிட, தோழர் G.ரங்கராஜ் நமது TMTCLU
சங்கம் தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்களுக்காக
நேர்மையாகவும், கொள்கை பிடிப்போடும் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதில்
பெருமிதம் என தமது துவக்கவுரையில் பதிவு செய்தார்.
மாவட்ட
செயலர் தோழர் A.S.குருபிரசாத் தமது
அறிமுகவுரையில் ஆய்படுபொருளை தெளிவாகவும்
விரிவாகவும் எடுத்து கூறினார். தோழர்கள் P.சுந்திரமூர்த்தி மாநில உதவிச்
செயலர் உரையில் சிறப்பாக செயல்பட்டு
கொண்டிருக்கும் TMTCLU மாவட்டச் சங்கத்தை
மனதார பாராட்டுக்கிறேன். மாநிலச் சங்கத்தின் சார்பில் செயற்குழு வெற்றி பெற
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தோழர் V.இளங்கோவன் மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர்
உரையில் உன்னதமான முறையில்
செயல்படும் மாவட்டச் சங்கத்திற்கு வாழ்த்துக்கள் கூறினார்.
NFTE மாவட்ட தலைவர் தோழர் G.கணேசன் கஷ்டப்படும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு அன்றிலிருந்து
இன்று வரையில் துடிப்போடும் சிறப்போடும்
செயல்படும் ஒரே சங்கம் TMTCLU சங்கம்
தான் என தனது உரையில் பதிவு செய்தார்.
மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் உரையில்
தொழிலாளர்களின் நலனில் மிக அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக ஒப்பந்த
ஊழியர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில் உறுதியாகவும், கொள்கைப் பிடிப்போடும்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாவட்டச் செயற்குழு வெற்றி பெற NFTE மாவட்டச் சங்கத்தின் சார்பில்
வாழ்த்துக்கள் தெரிவித்தார். தோழர் A.சுப்ரமணியன்
மாநில உதவிச் செயலர் நமது சங்கம் மிகச்
சரியான பாதையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றும் நமது சங்கத்தில்
இணைந்துள்ள பாரதி உள்ளிட்ட தோழர்களை மாநிலச்
சங்கத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம். தோழர் S.ராமசாமி நாம் என்றும் NFTE பேரியக்கத்தில்
இருப்பதில் தான் மகிழ்ச்சி. ஆகவே தான் NFTCL
சங்கத்திலிருந்து விலகி நான் NFTE-TMTCLU இணைந்தேன் என்று தனது உரையில் பதிவு செய்தார்.
தோழர் பாரதி NFTE-TMTCLU
சங்கங்கள் தொழிலாளர்களின் நலனில் மிக அக்கறையோடும் சரியான
பாதையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் TNTCWU சங்கத்தில்
இருக்கும் போதெல்லாம் இச்சங்கத்தில் குறைவான தோழர்கள்தான் இருக்கிறார்கள் என
நினைத்திருந்தேன். ஆனால் இச் செயற்குழுவில் நான் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான
தோழர்கள் வந்திருப்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், அதிகப்படியான
தோழர்களைக் கொண்ட மாவட்டச் சங்கம் என இப்போது தான் தெரிந்து கொண்டேன்.
உண்மையில் நான் இச்சங்கத்தில் இணைந்ததில்
மிக பெருமையடைகிறேன். இச்சங்கத்தில் தொடந்து பயணிப்பேன் என்று தமது உரையில் பதிவு
செய்தார்.
தோழர் R.அகஸ்டீன் NFTE மாவட்ட
அமைப்புச் செயலர், தோழர் S. மணி NFTE மாவட்ட உதவிச் செயலர் , தோழர் P.ராஜா மாவட்ட துணைத் தலைவர், தோழர் டெல்லிபாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தோழர் S.தமிழ்மணி மாநில இணைப்
பொதுச் செயலர் எதற்காக இச்சங்கம்
துவங்கப்பட்டதோ அதனை நோக்கி இச்சங்கம் சிறப்பாக செயல்படுகிறது . ஆகவே மிகச் சரியான
பாதையை நோக்கி பயணியுங்கள் , வாழ்த்துக்கள்.
தோழர் விஜய் ஆரோக்கியராஜ் மாநிலப்
பொருளாளர் என்றும் தனது பாணியில் சங்கம்
எவ்வாறு செயப்படுகிறது, நாம் எப்படி இருக்கிறோம், நாம் நமது சங்கத்தின்பால் எவ்வறு
இருக்க வேண்டும். நமது துறைக்கும் அரசியால் சார்ந்து எப்படி புரிதல்
வேண்டும், நமது தேவைகளை நிறைவேற்ற அரசியல்
சார்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும். பிற சங்கங்களை போல் அல்லாமல் நமக்கென தனி
அடையாளம் இருக்க ஒவ்வொவ்வரும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும். நமது NFTE-TMTCLU சங்கங்கள் கடலூர்,குடந்தை, தஞ்சாவூர் ஆகிய உறுதியால் நாம்
போனஸ் முழுமையாக பெற்றுள்ளோம். ஆகவே நமது சங்க தலைமையோடு ஒன்றினைந்து வலு
சேர்ப்போம் என தமது உரையில் பதிவு செய்தார்.
அடுத்தப்படியாக தோழர் R.செல்வம் மாநிலப் பொதுச்
செயலர் நமது NFTE-TMTCLU மாநிலச் சங்கங்களின் தொடர் முயற்சியின் காரணமாக
தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் ரூ 7000/-
போனஸ் பெற்றது நமது கடலூர் மாவட்டம் தான்.
அதன் தொடர்ச்சியாக தான் மற்ற மாவட்டங்கள் பெற்றுள்ளன. அதன் வழியில் தொடர்ச்சியாக
செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டச் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.
இறுதியாக
நமது NFTE மாவட்டச் செயலர் தோழர்
இரா.ஸ்ரீதர் கடலூர் NFTE-TMTCLU மாவட்டச் சங்கம் கொள்கையில் உறுதியோடு செயல்படுவதின் காரணமாகத்தான் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸ்
பெற்றுத் தந்துள்ளோம். அதன்வழியே நாம் இன்னும் பற்பல கோரிக்கைகளை வென்றெடுக்க நமது சங்கத்தை இன்னும் பலமுள்ளதாக கட்டிட
தொடர்ந்து பயணிப்போம், புதிதாக இணைந்த தோழர்களுக்கு NFTE
சங்கத்தின் வாழ்த்துகள். செயற்குழு வெற்றி பெற வாழ்த்துக்கள் என தமது உரையில்
பதிவு செய்தார்.
இறுதியாக தோழர் J.கந்தன் மாவட்டப் பொருளாளர் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூற
கூட்டம் நிறைவுற்றது.
மாவட்டச் சங்க நிர்வாகிகளில் 18 தோழர்கள் உட்பட 50க்கும்
மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும், சுமார் 30 நிரந்தர ஊழியர்களும் இச்செயற்குழுவில் பங்கேற்றனர். செயற்குழுவில் பங்கேற்று உரையாற்றிய
தோழர் விஜய் ஆரோக்கிய ராஜ் உள்ளிட்டத் தலைவர்களுக்கு நன்றி. செயற்குழுவிற்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு உபசரிப்புக்கு நிதி அளித்து உதவி செய்திட்ட
மூத்த தோழர் V. நீலகண்டன், தோழர் N.ராஜாராமன், தோழர் T.பாலாஜி அவர்களுக்கும் நமது நன்றி...
மாவட்ட
செயற்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
v இந்த ஆண்டு போனஸ் ரூ7000/- பெற்றே தீருவோம் என்று போராட்ட அறைகூவல் விடுத்து போனஸ் பெற்றோம். போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற NFTE மற்றும் BSNLEU மாவட்டச் சங்கங்களுக்கும், உறுதியாகச் செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி.
v நமது மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட சிப்காட், பெண்ணடம் பகுதி தோழர்களுக்கு மீண்டும் விரைந்து பணி வழங்க வேண்டும். மேலும் நீதிமன்ற
தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தும் வகையில் தோழர் ராமநாதன் அவர்களுக்கும் பணி
வழங்கிட மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
v A/C பிளாண்ட் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதா மாதம் சம்பள பட்டுவாடா நடைபெறுவதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்களும் முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை; ஆகவே A/C பிளாண்ட் பகுதி ஒப்பந்த ஊழியர்களை House Keeping Tender ல் சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தை
இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
v TMTCLU மாவட்டச் சங்க நடவடிக்கைகளை விரிவாக்கிட மூன்று புதிய பதவியினை உருவாக்க இச்செயற்குழு
அங்கீகரிக்கிறது. தோழர் M.பாரதிதாசன்
மாவட்ட இணைச் செயராகவும், தோழர் S.ராமசாமி
மாவட்டத் துணைத் தலைவராகவும், தோழர் M.கபிலன் மாவட்ட அமைப்புச் செயலராகவும் இச்செயற்குழு ஒருமனதாகத் தேர்வு செய்கிறது.. புதிய
நிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.
v இந்த ஆண்டு குறைந்த பட்ச போனஸ் ரூ 7000/=
வழங்கப்பட்டாலும் அது அனைவருக்கும் ஒரே அளவில் வழங்கப்படவில்லை எனத் தெரிய
வந்துள்ளது. பல ஒப்பந்த ஊழியர்களுக்குப்
போனஸ் குறைவாக வழங்கிய ஸ்ரீபாலஜி ஏஜென்ஸி அது கணக்கிடப்பட்ட விவரத்தை உடனடியாக
நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும்.. அந்த விவரத்தைப் பெறவும், மேலும் விடுபட்ட
தோழர்களுக்கு போனஸ் வழங்கிடவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை
எடுக்குமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
v BSNLEUவின் ஒப்பந்த
ஊழியர் சங்கமான TNTCWU சங்கத்திலிருந்து விலகிய அதன் மாவட்டச் செயலர் தோழர் M.பாரதிதாசன், TMTCLU சங்கத்தின் செயல்பட்டால் ஈர்க்கப்பட்டு, TMTCLU சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தோழர் M.பாரதிதாசன் மற்றும் அவரோடு இணைந்த அனைத்துத் தோழர்களையும் , மற்றும் தோழர் S. ராமசாமி உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் வாழ்த்தி TMTCLU
மாவட்ட சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
தோழமையுடன்
A.S.குருபிரசாத்
மாவட்டச்
செயலர்
Saturday, 27 October 2018
ஒரு நல்ல முடிவும் . .
.
அதிர்ச்சியில் புலம்பல்களும் . . .
அன்புள்ள தோழர்களே! வணக்கம் !.....
NFTE பேரியக்கத்தின் துணையோடு TMTCLU சங்கம் செம்மாந்து நடக்கிறது. தொடர்ந்து கொள்கை வழியில்தான் நடக்கும். சங்க வேறுபாடு, மாச்சரியங்களால் ஒருபோதும் ஒப்பந்த ஊழியர்களின் நலனுக்குப் புறம்பாய் நடக்காது. இதனால் நம்முடைய பயணத்தில் புரட்சி,
தாவிப் பாய்ச்சல்கள் இல்லாது இருக்கலாம்; ஆனால், நிதானமாக – நிச்சயமாக – இலக்கை நோக்கி நடைபோடும். இந்த நமது நம்பிக்கை வீண் போகவில்லை.
கடலூர்
TMTCLU இயக்கத்தில் புதிய தோழர்கள் இணைந்துள்ளனர். ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். வாழ்த்துக் கூறி வரவேற்போம்!
இது பலமான அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் இல்லாமல் இல்லை. இணைந்தவர்களில் குறிப்பிட வேண்டிய ஒருவர், தோழர் பாரதிதாசன் -- BSNLEU சங்கத்தின் ஒப்பந்த ஊழியர் பிரிவான TNTCWU சங்கத்தின் மாவட்டச் செயலாளர்.
தோழர் பாரதி 18
ஆண்டு காலம் தான் பொறுப்பு வகித்தச் சங்கத்திற்காகக் கடுமையாகத் துடிப்புடன் உழைத்தவர். பல போராட்டங்களில் ஈடுபட்டவர். அதனால் 5 முறை பணிநீக்கம் செய்யப்பட்டவரும் கூட. ஆனாலும் தளர்வின்றி ஏற்ற கொள்கைக்காக நின்றவர்.
அவர் மாவட்டச் செயலராய் இருந்து நடத்திய ஒப்பந்த ஊழியர் மாவட்ட மாநாட்டில் BSNLEU சங்கத்தின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் P. அபிமன்யு அவர்களே தனது உரையில் மாநாட்டில் கீழ்வருமாறு கூறிப்பிட்டார்:
இந்தியாவிலே
தமிழ்நாட்டிலுள்ள “கடலூர் மாவட்டத்தில்தான் ஒப்பந்த ஊழியர்களுக்குத் தாமதமின்றி சரியாக மாத ஊதியம் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில்தான் EPF / ESI சந்தா முறையாகப் பிடித்தம் செய்யப்பட்டு அலுவலகத்தில் செலுத்தப்படுகிறது; கணக்கு முறையாகப் பராமரிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில்தான் ஆட்குறைப்பு நடைமுறைப் படுத்த வேண்டிய போதும், முறையாக நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில்தான் காண்டிராக்டர் மாறினாலும் ஒப்பந்த ஊழியர் மாற்றமின்றி தொடரமுடிகிறது. இதற்கெல்லாம் காரணம் தோழர் பாரதிதாசனின் உழைப்பு” எனப் பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தார்.
அதே பாரதிதாசனைத்தான் தற்போது அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சமூக ஊடகத்தில் மோசமாகத் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் . . .‘ மாவட்டச் செயலாளர் பதவி சுகத்தை இத்தனை ஆண்டுகாலம் அனுபவித்து விட்டு ’ சங்கம் மாறி விட்டாராம். காரணம் பாரதி தோழர்களுடன் நமது சங்கத்தில் இணைந்ததுதான். அகில இந்தியப் பொதுச் செயலாளர் பாராட்டிய
– 5 முறை தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் பழிவாங்குதல்களை ஏற்ற – தோழர் பாரதிதாசன் எட்டிக்காயாக …
… நமக்கு ’ ச்சீ.. ச்சீ .. இந்தப் பழம் புளிக்கும். . .’ என்ற கதைதான் நினைவுக்கு வருகிறது.
தோழர் பாரதி கடலூர் BSNLEU மாவட்டச் செயலாளரின் போக்கு, சக தோழர்களை மதிக்காத போக்கு, நேர்மையற்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்து வெளியேறியிருக்கிறார். BSNLEU சங்கத்திற்குப் பதவி என்பது பொறுப்பு என்பதாக இல்லாமல் பதவி சுகம் என்றெண்ணுகிறது. என்ன செய்ய, தன்னைப் போல எண்ணுகிறது, அவ்வளவுதான்.
பல தலைவர்கள் வந்து பாரதியிடம் சமாதானம் பேசுகிறார்கள். மைக்கில் வர்க்கம் பேசுபவர்கள் நேரில் பேசும் போது சாதியத்தைத் துணைக்கழைப்பதுதான் வேதனை. அது மட்டுமா,
அவர்கள் வெளியேறியது கூட பரவாயில்லையாம். ஆனால் நமது NFTE--TMTCLU இயக்கத்தில் இணைந்ததைதான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
NFTE--TMTCLU அமைப்பு, தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கையே கூடாது என்று ஒருநாளும் வாதிட்டதில்லை. தவறுக்கு ஏற்ற தண்டனை –
அவர்கள் உணர்ந்து திருந்தும் வகையில் மட்டுமே தண்டனை – இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் வேலையை விட்டே நீக்கி விடுவது என்பது அந்த ஊழியனோடு அவனது குடும்பம் , குழந்தைகளையும் தண்டிப்பதாக அமையும். எனவே அந்தக் கடும் தண்டனையைத்தான் எதிர்த்தே வந்திருக்கிறோம். எந்த அமைப்பைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியரையும் வேலையை விட்டு நீக்கி விடுவது என்பதை நாம் ஏற்பதில்லை. அது நம் தலைவர்கள் கட்டி வளர்த்தச் சங்கத்தின் நீண்ட நெடிய மரபே ஆகும்.
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஒப்பந்த ஊழியர்கள் நலனுக்காக இணைந்து போராட நமது இயக்கம் தயங்கியதே இல்லை. தற்போது கூட NFTE மற்றும் BSNLEU மாநிலச் சங்கங்கள் இரண்டு நாள் காத்திருப்புப் போராட்டம் அறிவித்தன. தாமதமின்றி மாத ஊழியம் வழங்குதல் முதலியன கோரிக்கைகள். கடலூர் மாவட்டத்தில் அத்தகையப் பிரச்சனைகள் இல்லை என்று சொல்லி கடலூர் BSNLEU மாவட்டச் சங்கம் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டது. ஆனால் பிற மாவட்டத் தோழர்களுக்காகவும் --மாநிலச் சங்கங்களின் அறைகூவலை நிறைவேற்றும் பொருட்டும் நாம் மட்டும் இயக்கம் நடத்தினோம்.
பிரச்சனை இல்லை என்று ஓரம் கட்டிய அதே கடலூர்
BSNLEU மாவட்டச் சங்கம் பாரதியும் தோழர்களும் சங்கத்தை விட்டு விலகிய பிறகு அவசர அவசரமாக
– தாங்கள் விமர்சனம் செய்த அதே – மாலை நேர ஒரு மணிநேர தர்ணாவை நடத்தினர். காரணம் , மாநிலச் சங்க அறைகூவலாம், சொல்லிக் கொண்டனர்: எலி எட்டு முழம் வேட்டி கட்டி ஓடுகிறது, நம்புவோம்.
அதுவும் அந்த தர்ணாவில் பெரும் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
BSNLEU மாநிலச் சங்கத் தலைவர், மாநிலச் செயலாளர்,
மாநிலப் பொருளாளர் மற்றும்
TNTCWU மாநிலச் சங்கத் தலைவர், மாநிலச் செயலாளர், மாநிலப் பொருளாளர் என ஆறு தலைவர்கள் -- பிரச்சனை இல்லாத கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டனர். இதில் பேசியவர்கள் கடலூர் NFTE மாவட்டச் சங்கம் நிரந்தர ஊழியர்கள் பிரச்சனைகளை விட்டு விட்டு, ஒப்பந்த ஊழியர் மீது கவனம் செலுத்துகிறோம் என்று புலம்பல் வேறு.
NFTE சங்க வரலாறு தெரியாமல் பேசுகின்றனர். மஸ்தூர்களை ஒன்று திரட்டியது மட்டுமல்ல,
அவர்களை நிரந்தரப் படுத்த, நிரந்தர ஊழியர்கள் போராடினர். சாதி, இன, மத வேறுபாட்டிற்கு இடம் தராமல், வர்க்கச் சிந்தனையோடு வளர்ந்த சங்கம் எங்கள் NFTE,
போற்றத்தக்க அதன் தியாகத் தலைவர்களை நன்றியோடு வணங்குவோம்!
நம்முடைய இலக்குத் தொழிலாளர்களின் நலன். எனவேதான் இந்த ஆண்டு ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் கோரி BSNLEU சங்கத்தோடு இணைந்து கூட்டாக மாவட்ட நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்தோம். நிச்சயம் இந்த ஆண்டு உயர்த்தப்பட்ட போனஸ் தொகையைப் பெற்றே தீருவோம்.
சங்கத்தோடு வருத்தம் கொள்கின்ற தோழர்களோடு பேசுவதில் தவறில்லை. அது பொறுப்பான எந்த இயக்கத் தலைமையும் செய்வதுதான். ஆனால் அவதூறு செய்வது என்பதையோ,
பட்ட பாட்டை –
உழைத்த உழைப்பை – இழிவு செய்வது என்பதையோ ஏற்க முடியாது. என்ன செய்ய, அது அவர்கள் பண்பு, அவர்கள் பின்பற்றும் வழி.
ஆனால் நாம் கொள்கை வழிப்பட்டவர்கள். இந்தச் சுற்றறிக்கை கூடத் தேவையில்லைதான். ஆனால் நடப்பதை ஊழியர்கள் அறிய வேண்டுமே. அவதூறுகளுக்கு ஒரே பதில் நம்முடைய இயக்கத்தை மேலும் வலிமை உடையதாகச் செய்வது: அதற்கென உழைப்பதுதான்.
நம்பிக்கையுடன் இணைந்த தோழர்கள் பாரதிதாசன், தேவநாதன், சரவணன், ஸ்ரீராம், மணிகண்டன், முருகன் மற்றும் தொடர்ந்து இணைய இருக்கின்ற தோழர்களையும் மனதார தோழமையுடன் வரவேற்போம்! இணைந்து பயணிக்க உறுதி கூறுவோம்! வாருங்கள் தோழர்களே நமக்கு இயக்கப் பணிகள் காத்திருக்கு ! அவதூறுகளைப் புறக்கணித்து மேலும் தோழர்களுக்குத் தெளிவு படுத்துவோம்! அவர்களையும் நமது இயக்கத்தில் இணைப்போம்! நமது எதிர்காலம் உறுதியாக அமைப்பை உறுதியாக்குவோம்!
தோழமை வாழ்த்துக்களுடன்,
கடலூர் தோழமையுள்ள,
23—10--2018 M.S. குமார் J.கந்தன் A.S. குருபிரசாத்
தலைவர் பொருளாளர் செயலாளர்
TMTCLU மாவட்டச் சங்கம்
Subscribe to:
Posts (Atom)




















