தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Friday, 16 February 2018

NFTE – TMTCLU
மாநிலச் சங்கச் சிறப்பாய்வு கருத்துக் கேட்பு கூட்டம்

            நமது தமிழ்மாநிலத் தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநில அளவிலான சிறப்பு அமர்வு 14—02—2018ல் சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றதுசேலம் தோழர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் 10 மணிக்குத் துவங்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள மாநிலம் முழுமையிலிருந்தும் வந்திருந்த TMTCLU மற்றும்  NfTE சங்கத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களைக் கடலூர் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் A.S. குருபிரசாத் வரவேற்றார். அதனை தொடர்ந்து சிதம்பரம் கிளைச் செயலர் தோழர் D.ரவிச்சந்திரன் அஞ்சலியுரையாற்றினார்.
       மாநிலப்பொருளாளர் தோழர் எம். விஜய் ஆரோக்கியராஜ் சிறப்புக் கூட்டத்திற்கான அவசரத் தேவை மற்றும் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளின் கடுமையை விவரித்தார்அதை எதிர்கொள்ள பலமான அமைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த அமைப்பின் நிதி நிலமை பலமானதாக இருக்க வேண்டியதும் மிகமிக அவசியம் என்பதை விவரித்துக் கூறினார்எனவே நமது சங்கத்தின் நிதிநிலமையை நாம் விரும்புகின்ற அளவு முன்னேற்ற சந்தா முறைப்படுத்தல் உடனடிக் கடமையாகக் கொள்ள வேண்டும்தோழர்களும் தாமே முன்வந்து சந்தா செலுத்திடல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
       மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் ஆர். செல்வம் கூட்டத்திற்கான ஆய்படு பொருளை அறிமுகம் செய்தபின், NFTE மாநிலத் தலைவர் தோழர் P. காமராஜ் BSNL நிர்வாகம் நிதி நெருக்கடி காரணமாக, சிக்கன நடவடிக்கையாகஒப்பந்த முறையிலான செலவுகளைக் குறைக்க ஆட்குறைப்பு செய்ய, ஒப்பந்த முறைப் பணிகளைச் சீரமைப்பு செய்ய எண்ணுகிறதுஇது எதார்த்தமாக நம்முன் உள்ள நிலமை. இதனை ஏற்க முடியாது என ஒற்றைவரியில் நாம் சொல்லிவிட முடியாதுமாறாக, ஆட்குறைப்பை அதிக பாதிப்பு இல்லாமல், அதிகபட்சமான தொழிலாளர்களின் பணியை உறுதி செய்கின்ற வகையில் நாம் திட்டமிட வேண்டும்அதனை ஆலோசிப்பதற்காகவே நாம் இங்கு கூடியிருக் கின்றோம்நிச்சயமாக வெற்றிகரமாக இதனைக் கையாள்வோம் என உறுதிபடக் கூறினார்.
       அதன்பின்னர் 12 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் சுருக்கமாக தங்கள் கருத்துகளை நேர்த்தியாக எடுத்துக் கூறினர்
       அதனையடுத்து தஞ்சை NFTE மாவட்டச் செயலாளர் தோழர் கிள்ளிவளவன் தங்கள் பகுதி நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்கள் அதிகம் எனக் கூறி வருகிறதுஅதனை உரிய வழியில் சரிசெய்து நமது தொழிலாளர்களைப் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும் என்றுரைத்தார்.
       கடலூர் NFTE மாவட்டச் செயலாளர் தோழர் இரா.ஸ்ரீதர் தமிழ் மாநிலச் சங்கம் அங்கீகரித்த  ( TMTCLU) ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயல்பாட்டிற்கு கடலூர் மாவட்டச் சங்கம் உறுதுணையாக இருக்கும் என உறுதி கூறினார்.
       தோழர்களின் கருத்துரைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன (தீர்மானங்கள் தனியே)
       நிறைவுரையாக NFTE மாநிலச் செயலாளர் அருமைத் தோழர் கே. நடராஜன் அவர்கள் பேசும் போது, TMTCLU மாநிலச் சங்கம் தோழர் ஆர். செல்வம் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வருகிறார் எனப் பாராட்டு தெரிவித்தார். TMTCLU மாநிலச் சங்கம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் NFTE  மாநிலச் சங்கமும் மத்திய சங்கமும் உறுதுணையாக நிற்கும் என அறிவித்தார்மேலும், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்கு மாறாகவோ அல்லது மாநில நிர்வாகத் தலைமை மாறும்போது நிலமை கடுமையாகுமென்றால் நிச்சயம் போராடித் தொழிலாளர் நலம் காப்போம் எனச் சூளுரைத்தார்
       இறுதியாக, மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஆர். செல்வம் தொகுத்து உரையாற்றினார்அவர் தமது தொகுப்புரையில் NFTE மாநிலச் சங்கத்தோடு இணைந்து பணியாற்றுவதால் நம்மால் சாதிக்க முடிகிறதுநமது மாநிலச் சங்கத்தின் சார்பில் சமவேலைக்குச் சம ஊதியம், ஊதியத்துடன் கூடிய வாராந்திர ஓய்வு முதலிய வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன. சாதகமானத் தீர்ப்பு வரும் என நம்புகிறோம்மாநில நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பல சாதகமான மாறுதல்களைச் செய்து வருகிறோம்நமக்குத் தேவை ஒற்றுமைமேலும் ஊழியர்களை நமது சங்கத்தின் பால் திரட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு சிறப்புக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்த சிதம்பரம் தோழர்களுக்கு நன்றி கூறினார். குறிப்பாக காலை மாலை தேனீர் வழங்கிய சிதம்பரம் தோழர்களுக்கும் மதிய உணவு வழங்கிய தோழர் இரா ஸ்ரீதர் அவர்களுக்கும் நன்றி கூறினார்.
       இறுதியில் சிதம்பரம் NFTE கிளைச் செயலாளர் தோழர் V. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூற கருத்தாய்வுக் கூட்டம் நிறைவடைந்தது.

தீர்மானங்கள் :
  • 1.   ஒப்பந்தத் தொழிலாளர் ஊதியப் பிரச்சனைக்கு BSNLEU சங்கத்துடன் இணைந்து போராடி மாதாந்திர ஊதியத்தை உறுதிப்படுத்திய மாநிலச் சங்கத்திற்கு நன்றி.

  • 2.  அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கம் BSNL நோடல் அதிகாரி கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.

  • 3.         TMTCLU மாநில மாநாட்டை மே மாதத்தில் நடத்துவது .

  • 4. ஒப்பந்த ஊழியர்கள் ஆட்குறைப்பைத் தன்னிச்சையாக நடைமுறைப் படுத்துவதைத் தடுத்து நிறுத்திஅதற்கு மாறாகNFTE  மாநிலச் சங்கம் வழங்கிய வழிகாட்டலைச் சரியானது என ஏற்றுக் கொள்வது.

  • 5.   பணித் தன்மைக்கேற்ப ஊதியம் வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.


  • 6.   சிறப்புக் கூட்டம் நடத்த உதவிய கடலூர் மாவட்டச் சங்கங்களுக்கும் சிதம்பரம் கிளைக்கும் நன்றி பாராட்டுதல்







Tuesday, 23 January 2018

தமிழ் மாநிலத் தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்
மாவட்டச் சங்கம்,கடலூர்

தோழர்களே!
        கடலூர் மாவட்டச் சங்கத்தின் 6வது மாவட்ட மாநாடு தோழர் M.S.குமார் அவர்களின் தலைமையில் விழுப்புரத்தில் 21.01.2018 அன்று நடைப்பெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக நமது மாநிலப் பொருளாளர் தோழர் M.விஜய் ஆரோக்யராஜ்   TMTCLU சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து  நமது மாநிலத் தலைவர் தோழர் ஆர் கே நமது சங்கத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார்.
        துவக்கவுரையாக தோழர் நமது மாநிலப் பொருளாளர் தோழர் M.விஜய் ஆரோக்யராஜ்   தனது பாணியில் சங்கத்தின் செயல்பாட்டினைப் பற்றியும் நிதி சம்மந்தமான பிரச்சனைகளையும் எடுத்துக் கூறினார். கடலூர் மாவட்டச் சங்கம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகிறது என  தமது உரையில் பதிவு செய்தார்.
         மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் நமது சங்கத்தின் அமைப்பு நிலையினை மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.  அடுத்து  தோழர் R.அகஸ்ட்டீன் விழுப்புரம், தோழர் R.பன்னீர்செல்வம் கிளைச் செயலர் கடலூர், Y.ஹாரூன் பாஷா கிளைச் செயலர் TNV,  தோழர் E.C கண்ணன் கிளைச் செயலர் கள்ளக்குறிச்சி, தோழர் D.ரவிச்சந்திரன் கிளைச் செயலர்/CDM, தோழர் A.பாஸ்கரன் கிளைத் தலைவர்/ULD, தோழர் M.மணிகண்டன் மாவட்ட அமைப்பு செயலர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
        அதனைத் தொடர்ந்து  தோழர் ஆ.சவுரிராஜன் மாவட்டப் பொதுச் செயலர் AITUC, K.முருகன்  மாநிலத் தலைவர் அரசு பணியாளர் சங்கம், K.மோகன் மாவட்டச் செயலர், வங்கி ஊழியர் சங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். NFTE மாநில உதவிச் செயலர் தோழர் G.S.முரளிதரன் இன்றைய சூழலில் நமது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். அதற்கு நாம் உறுதியான எடுக்க வேண்டும். ஆட்குறைப்பை தவிர்க்க நாம் நேர்த்தியான முறையில் நிர்வாகத்திடம் அணுக வேண்டும் என்றார்.
        AITUCயின் அகில இந்தியச் செயலர் தோழியர் வஹிதா நிஜாம்  இன்றையச் சூழலில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையை கண்டு AITUC பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டு வருகிறது . AITUC  சங்கம்  உங்களின் தாய்ச் சங்கம். உங்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்றும், நீங்கள் துவக்கப் போகும் அகில இந்திய அமைப்பிற்கு நிச்சயம் எங்களின் ஆதரவு உண்டு என பலத்த கரவொலிக்கிடையே உரையில் பதிவு செய்தார்.
        அடுத்தப்படியாக நமது மாநில தலைவர் தோழர் ஆர் கே  இன்றையச் சூழலில் ஒப்பந்தத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில் செயல்படும் நிர்வாகத்தினை கண்டித்துப்  பேசினார். தொழிலாளர்களை அனுப்பும் போக்கினை நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லாவிடில் பெரும் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்றார். தொழிலாளர்களை யாரும் கில்லுகீரை அல்ல, அவனும் மனிதனே!, அவர்களும் மதிக்கப்பட வேண்டும் என்றார். அது மட்டுமில்லாது நமது அமைப்பை இன்னும் பலப்படுத்திட அகில இந்திய அமைப்பினை உருவாக்கிட தீவிர முயற்சி எடுத்து வருகிறோம் என்றும் அதுவும் ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என்றவுடன் ஒப்பந்த ஊழியர்களின் மத்தியில் மகிழ்ச்சி பொங்க அரங்கம் முழுவதும் கரவொலி எழுப்பினர்.
         நமது தொழிற்சங்கச் தலைவர் தோழர் K.சேது அவர்கள் கடலூர் மாவட்டச் சங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். அடுத்தப்படியாக TMTCLU சங்கத்தின் பிதாமகனும்  மாநில துணைப் பொதுச் செயலாளருமான தோழர் S.தமிழ்மணி அவர்கள் நமது தோழர்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் புதிய நிர்வாகிகளுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். NFTE மாநில தலைவர் P.காமராஜ் தனக்கே உரிய பாணியில் நிர்வாகத்தின்  அணுகுமுறை எப்படி இருக்கிறது அதனை எவ்வாறு அணுகிச் செயல்பட வேண்டும் என்று பதிவு செய்தார்.
        NFTE  மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன்  புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு நமது இந்த இரண்டு சங்கங்களும் இணைந்து பல்வேறு செயல்களை தொழிலாளர்களுக்குச் செய்து கொண்டு வருகிறது.  ஆட்குறைப்பினை நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது என்றும் நாம் இன்னும் செய்ய வேண்டிய செயல்பாடுகள் ஏராளம். இந்த கடலூர் மாவட்டச் சங்கம் நல்ல எடுத்துகாட்டாக செயலபடுகிற மாவட்டச் சங்கம் என்றும் . அதனினும் NFTE மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என்று பெருமையோடு கூறிக் கொள்கின்றேன்  எனத் தமது சிறப்புரையில் பதிவு செய்தார்.
        TMTCLU மாநிலப் பொதுச் செயலர் தோழர் R.செல்வம்  நமது மாநிலச்  சங்கத்திற்கு உறுதுணையாக கடலூர் மாவட்டச் சங்கம் விளங்குகிறது. இன்னும் நாம் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு  மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
        இறுதியாக NFTE யின் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்  மிக அதிகளவில் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. புதிய தலைமையினை உருவாக்கி , அந்த தலைமை இன்னும் துடிப்புமிக்க செயல்பாட்டோடு செயலாற்றிட வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு  புதிய நிர்வாகளை அறிமுக செய்தார். புதிய நிர்வாகிகளை தோழர் S. நடராஜன் முன்மொழிய தோழர் A.சுப்ரமனியன் வழிமொழிந்தார்.
        மாவட்ட மாநாட்டிற்கு தோழர் மனோகர் திருச்சி, அவருடன் சண்முகம், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கும், தோழர் M.விஸ்வநாதன் மாவட்டச் செயலர் ,தோழர் M.பாரதிதாசன்  உள்ளிட்ட அனைத்து தருமபுரி தோழர்களுக்கும் , தோழர் R.ராஜேஷ் மாவட்டச் செயலர் குடந்தை , அவரோடு வந்திருந்த அனைத்து குடந்தை தோழர்களுக்கும் , வேலூர் மாவட்ட பொருப்பாளர் தோழர் M.ராஜ்குமார் மற்றும் அவரோட   வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும், விருது நகரில் இருந்து வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும், சேலத்திலிருந்து வந்திருந்த மாவட்ட பொருப்பாளர் தோழர் இசையரசன் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும்,  தஞ்சை தோழர்களுக்கும்,  புதுவையிலிருந்து வந்திருந்த மாவட்ட செயலர் நாகலிங்கம் உள்ளிட்ட அனைத்து புதுவை தோழர்களுக்கும், திருச்சியிலிருந்து வந்திருந்த தோழர் சன்முகம், தமிழ்செல்வம் உள்ளிட்ட தோழர்களுக்கும்  புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலர் A.S குருபிரசாத் நன்றி நவில கூட்டம் நிறைவுற்றது.
         நிறைவான தோழர்கள் கலந்து கொள்ள மிகச் சிறப்பாக  காலை உணவு , தேனீர், மதியம் உணவு , தேனீர் வழங்கி  மாநாடு சிறப்பிக்க  அரும்பாடுபட்டு  உழைத்த  தோழர் நடராஜன் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்...

தோழமையுடன்
  M.S.குமார்                  J.கந்தன்                     A.S.குருபிரசாத்

    மாவட்ட தலைவர்                           மாவட்ட பொருளாளர்                                     மாவட்ட செயலர்