தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday, 14 September 2016

தமிழ் மாநில செயற்குழு TMTCLU குடந்தை



மாநில செயற்குழு முடிவுப்படி 
மாநிலம் முழுவதும் ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகள் வலியுறுத்தி 
22.9.2016 வியாழன் -கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 
திரளாய் பங்கேற்ப்பீர் !

Tuesday, 13 September 2016

மாவட்ட மாநாடு TMTCLU குடந்தை

ஊரை எழுப்பிடவே - துயர் ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன் !
 NFTE மண்ணில் முளைத்தவன் நான் ...!
அதன் மார்பில் திளைத்தவன் நான் ! எண்ணி துணிந்துவிட்டேன் !
அநீதி எதிர்த்திடுவேன் ....அடித்து துரத்திடுவேன் ! 
என முழக்கத்தோடு ....திரள் தோழர் கூட்டத்தில் ..
தோழர் எம் ஆர் தேசிய கொடி உயர்த்த ...ஜோதி சங்க கொடி உயர்த்த 
துவங்கியது ....உற்சாகமாய் !
மாவட்டத்தின் பல பகுதி ஒப்பந்த ஊழியர்கள் ..பிரச்சினைகள் எடுத்துரைக்க ...

தோழர்கள் .ஜெயபால் .லட்சம் .செல்வம் ,தமிழ்மணி  வாழ்த்துரைக்க ..
தோழர்கள் .நடராஜன் ..மாநில செயலர் ..காமராஜ் ...மாநில தலைவர் 
வழிநடத்தும் உரை தர ...
SEWA மாநில தலைவர் .தோழர் .G .கனகராஜன் ...
PEWA மாநில செயலர் .தோழர் .N.பாலகிருஷ்ணன் ..
TEPU மாவட்ட செயலர் தோழர் .T .ஜெயராமன் ...
 SNEA தலைவர் திரு கபிலன்  என தோழமையாளர்கள் 
 வருகை தந்து வாழ்த்துரைக்க ...குடந்தை மாவட்ட நிர்வாகிகளாக ...
தோழர்கள் .சந்திரசேகர் -ராஜேஷ் -அசோக்குமார் ...தேர்வாகினர் ...
துள்ளல் ...உற்சாகம் ...வேகம் ...கோபம் ...பிரதிபலிக்க  
மாவட்ட மாநாடு ....!!! சிறக்க வென்றது ! 

Friday, 12 August 2016

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்

என்எல்சியில் 12 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நிர்வாகத்துடன் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்றத் தின் உத்தரவுப்படியும் எவ்வித நிபந்தனையின்றி இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். ‘அவுட் சோர்ஸிங்' முறையில் வேலைகளை செய்வதை கைவிட வேண்டும், ‘இன்கோ-சர்வ்' பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழி லாளர் சங்க நிர்வாகிகளை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என் பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைவர் உக்கிரவேல் மற்றும் செயலாளர் வெங்கடேசன் நேற்று என்எல்சி மனித வளத்துறை பொது மேலாளர் தியாகராஜனிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.
இது தொடர்பாக வெங்கடேசன் கூறும்போது, “வேலை நிறுத்தம் தொடங்க செப். 2-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் வேலைநிறுத் தத்தில் ஈடுபடுவோம்” என்றார்.